Saturday 4th of May 2024 02:30:44 AM GMT

LANGUAGE - TAMIL
.
இறைச்சிக்காக வெட்டப்பட்ட கடலாமைகள்: யாழில் விசேட அதிரடிப்படையினரால் நால்வர் கைது!

இறைச்சிக்காக வெட்டப்பட்ட கடலாமைகள்: யாழில் விசேட அதிரடிப்படையினரால் நால்வர் கைது!


யாழில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இறைச்சிக்காக கடலாமைகளை வெட்டிக் கொண்டிருந்த நிலையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட கடலாமை இறைச்சியை விற்பனை செய்வதற்காக வெடிக்கொண்டு இருந்த நால்வரே இவ்வாறு யாழ்ப்பாணம் குருநகர் அண்ணாசிலை பகுதியில் வீடு ஒன்றில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

விசேட அதிரடைப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடு ஒன்றினை சோதனையிட்ட போது அங்கே நான்கு கடல் ஆமைகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்துள்ளது.

இதையடுத்து அந்த வீட்டில் இருந்த குருநகர் பகுதியை சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு 4 கடல் ஆமையின் பாகங்களும் விற்பனைக்கு தயாராக இருந்த இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கடல் ஆமை இறைச்சி மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE